சினிமா செய்திகள்

கல்கி 2898 ஏடி-2 ரிலீஸ்: நிறைய வேலை பாக்கி இருக்கு.. தயாரிப்பாளர் சொல்வது என்ன..?

Published On 2024-08-30 11:33 GMT   |   Update On 2024-08-30 11:33 GMT
  • மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.
  • திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகி மக்கள் பலரால் பார்க்கப்பட்டது. திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும்.

திரைப்படம் எடுக்க காலவகாசம் 3 ஆண்டுகள் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனால் அடுத்த பாகம் 2028 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News