சினிமா செய்திகள்

அடுத்த தளபதி யார்... அசராமல் பதில் கொடுத்த லெஜண்ட் சரவணன்

Published On 2024-09-14 12:36 GMT   |   Update On 2024-09-14 12:36 GMT
  • கோட் படம் ஒரு பேண்டஸி படம். அந்த அளவில் அதை ரசிக்கலாம்.
  • எனது கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்

தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு அவர் நிதானமாக பதில் அளித்தார்.

கேள்வி: ஹேமா கமிட்டி குறித்து உங்கள் கருத்து

லெஜெண்ட் சரவணன்: கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று நம்புகிறேன்

கேள்வி: நீங்கள் படங்களில் நடிப்பது அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?

லெஜெண்ட் சரவணன்: மக்கள் நலன்களில் எப்போதும் எனக்கு அக்கறை உண்டு. காலம் நேரம் அமைந்தால் அரசியலுக்கு வருவேன். எனது கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்.

கேள்வி: விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் போவீர்களா

லெஜெண்ட் சரவணன்: இன்னும் அதைப்பற்றி யோசிக்கவில்லை

கேள்வி: விஜய் கட்சிக்கு நீங்கள் ஆதர்வு தெரிவிப்பீர்களா?

லெஜெண்ட் சரவணன்: இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. 2026 தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும். வலுவான கூட்டணி ஆமைக்கு கட்சி ஆட்சியை பிடிக்கும்.

கேள்வி: விஜயின் கோட் படம் பார்த்தீர்களா? அந்த படம் குறித்து உங்களது கருத்து

லெஜெண்ட் சரவணன்: கோட் படம் ஒரு பேண்டஸி படம். அந்த அளவில் அதை ரசிக்கலாம்.

கேள்வி: சினிமாவில் அடுத்த தளபதி யார்?

லெஜெண்ட் சரவணன்: நீங்கள் தான் அடுத்த தளபதி யார் என்று சொல்ல வேண்டும்

என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News