சினிமா செய்திகள்
null

மோகன்லால் எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்கவே இல்லை - ஜோ மல்லூரி

Published On 2024-07-01 07:43 GMT   |   Update On 2024-07-01 07:52 GMT
  • விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர்.
  • ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

2014 ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள நட்சத்திர நடிகர்களான விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர். இப்படத்தை ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. காஜல் அகர்வால், மஹத், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

ஜோ மல்லூரி ஜில்லா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவர் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் ஜில்லா படத்தின் போது நடந்த சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது ஜில்லா படப்பிடிப்பில் போது நடிகர் விஜய், மோகன்லால் மற்றும் மோகன்லாலின் குடும்பம் மற்றும் ஜோ மல்லூரியை அவர் வீட்டில் விருந்து சாப்பிட அழைத்துள்ளார். இரவு 7 மணி அளவில் இவர்கள் விஜய் வீட்டிற்கு சென்றடைந்தனர்.

 

விஜய், விஜயின் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் இவர்களை அன்பாக வரவேற்த பின் விஜய் அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார். மோகன்லால் எத்தனை முறை கூறியும் விஜய் அவருடன் உட்கார்ந்து சாப்பிட மறுத்துவிட்டார். அவர் வந்த விருந்தாளிகளை கவனிப்பதே முக்கியம் என்ற மனநிலையில் இருந்தார். விஜய் அவரின் விருந்தாளியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணமுடையவர். என்று கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News