சினிமா செய்திகள்

மாற்றத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

Published On 2024-06-19 02:38 GMT   |   Update On 2024-06-19 02:38 GMT
  • சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன.
  • ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளை இணைந்து வருகின்றனர்.

நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரது இந்த பணியில் KPY பாலாவும் இணைந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஏழ்மை நிலையில் வாடும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன. ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளையில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா மாற்றத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:-

எனது சொந்தப் பணத்தில் மாற்றம் அறக்கட்டளை மூலம் 10 டிராக்டர்களை விவசாயிகளுக்கு வழங்கியது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இன்று (நேற்று) எஸ்.ஜே.சூர்யா அண்ணன் தன் சொந்தப் பணத்தில் இன்னொரு டிராக்டரைச் சேர்த்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரிக்கு 11வது டிராக்டரைக் கொடுத்தோம். அவருடைய ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எஸ்.ஜே.சூர்யா மற்றும் அவரது குடும்பத்திற்காக நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். எனக்கு எப்போதும் போல் உங்கள் அன்பும் ஆசியும் தேவை என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News