சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன்

கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

Published On 2022-12-13 06:00 GMT   |   Update On 2022-12-13 06:00 GMT
  • திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
  • அவரை கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். அவரை கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு, கோ-பூஜை, கஜபூஜை செய்து வைக்கப்பட்டது.

 

சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அவரை காண கோவிலில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News