கிரிக்கெட்

அந்த உலகக் கோப்பைக்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ நான் அப்படி அழுதது கிடையாது- கம்பீர்

Published On 2024-07-02 15:27 GMT   |   Update On 2024-07-02 15:27 GMT
  • நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன்.
  • இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவு பெற்றது.

இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை பார்த்து அன்று இரவு முழுவதும் அழுததாக கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அந்த ஒரு போட்டியை பார்த்து நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உண்மையில் நான் அன்று இரவு முழுவதும் அழுதேன். அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ நான் அப்படி எதற்குமே அழுதது கிடையாது.

அப்போது எனக்கு 11 வயது. நான் இரவு முழுவதும் அழுதேன். நான் அப்பொழுதுதான் இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992-ல் முடிவு செய்து 2011-ம் ஆண்டு நிறைவேற்றினேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News