கிரிக்கெட்

உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா தோல்வி.. அந்நாட்டு ஊடகங்கள் கூறும் காரணங்கள்

Published On 2024-07-03 15:03 GMT   |   Update On 2024-07-03 15:03 GMT
  • டேவிட் மில்லரின் கேட்சை பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவ் பிடித்தார்.
  • அப்போது எல்லைக்கோட்டை சூர்யா தொட்டுவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில், தொடர் தொடங்கியது முதல் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்க அணி, இறுதிப்போட்டியில் நல்ல நிலையில் இருந்தபோது இந்தியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்தது.

தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லவிடாமல் செய்தது இந்தியாவின் ஆட்டத் திறனா அல்லது க்ளாசன் செய்த தவறா, இல்லை ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சா, சூர்யகுமாரின் கேட்சா என அந்தச் செய்தி இணையதளம் கேள்வி எழுப்பியுள்ளது.

டேவிட் மில்லரின் கேட்சை பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவ் பிடித்தார். அப்போது எல்லைக்கோட்டை சூர்யா தொட்டுவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனை அதுவல்ல. மாறாக, ஃபார்ம் அவுட்டில் இருந்த கோலியை தொடக்கத்திலேயே பவுண்டரி விளாச அனுமதித்ததும் தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு ஒரு காரணம் சொவீடன் லைவ் இணையதளம் கூறியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டியில் தோற்றதற்கான மூன்று முக்கியக் காரணங்களை தி சௌத் ஆப்ரிக்கன் என்ற இணையதளமும் பட்டியலிட்டுள்ளது.

இது குறித்து அந்த இணையதளம் கூறியதாவது:-

டேவிட் மில்லரும், க்ளாசனும் களத்தில் நின்றவரை, தென்னாப்பிரிக்காவின் கை ஓங்கியிருந்தது. க்ளாசன் ஆட்டமிழந்தது, தென் ஆப்பிரிக்காவின் வேகத்தைக் குறைத்துவிட்டது. இருந்தாலும் மில்லர் இருந்த வரை, தென் ஆப்பிரிக்கா வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது.

பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே முடியவில்லை. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த க்ளாசனால்கூட பும்ரா ஓவரில் பவுண்டரி விளாச முடியவில்லை. நன்றாக ஆடிக்கொண்டிருந்த மில்லரும் பும்ரா பந்தில் சிங்கிள் எடுத்து, புதிதாகக் களமிறங்கிய மார்க்கோ யான்சனுக்கு ஸ்டிரைக்கை வழங்கினார். பும்ராவின் பந்துவீச்சை அவரால் எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழக்க நேர்ந்தது.

இதேபோல, மில்லரின் கேட்சும் அதைத்தொடர்ந்து எஞ்சிய 5 பந்துகளில் வெற்றிக்காகப் போராடிய கேசவ் மகராஜ், ககிசோ ரபாடாவின் விக்கெட்டுகளும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவிட்டது.

மில்லரின் கேட்ச்சை பவுண்டரி லைனில் சூர்யகுமார் பிடித்தபோது அவரது கால் லேசாக பவுண்டரி லைனில் பட்டதாக சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக், அந்த கேட்ச்சில் எந்தத் தவறும் இல்லை. குஷன் லேசாக நகர்ந்தது. ஆனால் அது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். சூர்யகுமார் குஷன் மீது ஏறவில்லை எனக் கூறினார்.

இவ்வாறு அந்த இணையதளம் செய்தி வெளியிட்டது.

Tags:    

Similar News