கிரிக்கெட்

அரை சதமடித்த சமாரி அடப்பட்டு

மகளிர் டி20 உலக கோப்பை - பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை திரில் வெற்றி

Published On 2023-02-10 20:25 GMT   |   Update On 2023-02-10 20:25 GMT
  • மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
  • முதல் போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

கேப்டவுன்:

8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. கேப்டன் சமாரி

அடப்பட்டு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் அவுட்டானார். விஷ்மி குணரத்னே 38 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது சமாரி அடப்பட்டுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News