கிரிக்கெட் (Cricket)

சேலம் அணிக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ்

Published On 2022-07-13 16:25 GMT   |   Update On 2022-07-13 16:25 GMT
  • திருப்பூர் அணி 6.4 ஓவர்கள் ஆடிய நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
  • சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 6.4 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கிய நிலையில், தொடர்ந்து ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சிக்கந்த அனுருதா 32 ரன்கள் எடுத்தார். அத்துடன் டிஎன்பிஎல் தொடரில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மான் பஃப்னா 29 ரன்கள், அரவிந்த் 25 ரன்கள் எடுத்தனர். சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார். கணேசன் பெரியசாமி, கிஷோர், ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.

Tags:    

Similar News