உலகக் கோப்பை தொடரில் நாளை இரண்டு ஆட்டங்கள்: இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா மோதல்
- முதல் போட்டியில் இலங்கை-நெதர்லாந்து மோதுகிறது.
- இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு லக்னோவில் தொடங்கும் 19-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணிதான் போதிய மூன்று ஆட்டத்திலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
நெதர்லாந்து அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
இவ்விரு அணிகளும் உலக கோப்பைக்கான தகுதி சுற்றில் இறுதிப் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.
மதியம் 2மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 3 போட்டியில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.
தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியும் கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. தென்ஆப்பிரிக்கா 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.