முக்கிய விரதங்கள்

இறைவனின் அருளை பெற பக்தர்கள் விரதம் இருக்கும் முறை

Published On 2023-02-09 06:57 GMT   |   Update On 2023-02-09 06:57 GMT
  • கீழ்கண்ட முறையில் விரதம் இருக்க ஆன்மிக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  • விரதம் என்பது அனைத்து தெய்வத்துக்கும் ஒன்றாக உள்ளது.

இறைவனின் அருளை பெற பக்தர்கள் பல்வேறு வழிபாட்டு முறைகளை பின்பற்றுகின்றனர். இதில் விரதம் என்பது அனைத்து தெய்வத்துக்கும் ஒன்றாக உள்ளது. தேவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரதர், விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது.

முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும் என்றால் பக்தர்கள் கீழ்கண்ட முறையில் விரதம் இருக்க ஆன்மிக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப்பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும்.

மாலையில் வீட்டில் முருகப் பெருமான் திருவுருவப் படத்தை அலங்கரித்து, தீபம் காட்டி, அரிசியும், துவரம்பருப்பும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து, அந்தப் பொங்கலையே பிரசாதமாக உண்டு விரதத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

Tags:    

Similar News