முக்கிய விரதங்கள்

16 வகையான செல்வங்களையும் அருளும் புதன்கிழமை பிரதோஷ விரதம்...

Published On 2022-08-24 01:24 GMT   |   Update On 2022-08-24 01:24 GMT
  • இன்று விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும்.
  • இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.

இன்று பிரதோஷம். புதன்கிழமையில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று விரதம் இருந்து மாலை சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசித்தால் வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தந்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும்.

புதன் என்பது அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். .

புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும். இன்று நந்தி அபிஷேகத்துக்கு இளநீர் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீக நம்பிக்கையாக உள்ளது. இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.

இன்று மாலை கோவிலில் தயிர் சாதம் வழங்குபவர்களுக்கு, நீண்ட நாள் காரியம் நிறைவேறும். பசுவிற்கு 4 மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும்.

Tags:    

Similar News