முக்கிய விரதங்கள்

வல்லடிகாரர் கோவில் விழா: 15 நாட்கள் கடும் விரதம் இருக்கும் 56 கிராம மக்கள்

Published On 2023-02-22 04:34 GMT   |   Update On 2023-02-22 04:34 GMT
  • கிராமமக்கள் சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதில்லை.
  • இந்த கிராமங்களில் இறைச்சிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

மேலூர் அருகே வெள்ளலூரை சுற்றி உள்ள 56 கிராமங்கள் வெள்ளலூர்நாடு என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் வல்லடிகாரர் கோவில் திருவிழா மாசி மாதம் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா பாரிவேட்டை நாளன்று தொடங்கியது. இதையொட்டி 15 நாட்களுக்கு வெள்ளலூர் நாட்டு 56 கிராம மக்கள் கடுமையான விரதத்தை தொடங்கி உள்ளனர்.

அதன்படி மேற்கண்ட கிராமமக்கள் சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. ஓட்டல்களில் தோசை, புரோட்டா மற்றும் அசைவ சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீடுகள் கட்டுமான வேலைகள் செய்வதில்லை, மண் தோண்டுவது, மரம் வெட்டுவது போன்ற வேலைகளையும் அந்த கிராம மக்கள் செய்வதில்லை. இந்த கிராமங்களில் இறைச்சிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதத்தை வெள்ளலூர் நாடு எனப்படும் 56 கிராம மக்களும் மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல் வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் இந்த 56 கிராமங்களை சேர்ந்தவர்களும் விரதம் இருந்து வருகின்றனர்.

Tags:    

Similar News