பொது மருத்துவம்
null

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் செம்பு பாத்திரம்

Published On 2024-07-03 03:11 GMT   |   Update On 2024-07-03 08:23 GMT
  • செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது.
  • குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது.

தண்ணீர் அசுத்தமான நிலையில் இருக்கும் போது அதை அருந்தினால் பல வகையான நோய்கள் உருவாகும். இந்த பாதிப்புக்கு காரணம் தண்ணீரில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள்தான்.

இந்த கிருமிகள் குறித்து பண்டைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால், தண்ணீரில் மறைந்திருக்கும் ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற கிருமிகளை அழிக்க அவர்கள் சில உத்திகளை கையாண்டார்கள்.

அந்த வகையில், தண்ணீரை செப்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து பருகினார்கள். தண்ணீரை தேக்கி வைக்கும் நீர் நிலைகளில் செப்பு நாணயங்களை எறிந்து தண்ணீரை சுத்தப்படுத்தினார்கள்.

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு, கனிமத்தில் இருந்து அயனிகள் பெறுகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் சேமிக்கப்படும் போது செம்பு அதன் சில அயனிகளை தண்ணீரில் பரிமாற்றம் செய்கிறது. இதன் காரணமாக தண்ணீரானது, கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெறுகிறது.

பொதுவாக, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதால் உடலில் சில நோய் வராமல் தடுப்பதுடன் ஒருவரது சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்வதற்கும் தாமிரம் உதவுகிறது.

இது தைராய்டு சுரப்பியை நன்றாகச் செயல்பட தூண்டுகிறது. பொதுவாக, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படுகிறது. செம்பு உடலில் இரும்பை உறிஞ்ச உதவுவதால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த சோகை தடுக்கப்படுகிறது. மேலும், செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது.

இதனால், மூட்டுவலிக்கு சரியான மருந்தாக அமைகிறது. செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. செம்பு ரத்த நாளங்களை சுத்தப்படுத்த உதவுகிறது.

இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. நரம்புகளையும் வலுப்படுத்தும். அந்த வகையில் செம்பு என்பது, மனித உடல்நலத்துக்கு உதவும் உலோகம் ஆகும்.

Tags:    

Similar News