செய்திகள்

திருவொற்றியூரில் மின்தடை: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓட்டுப்பதிவு

Published On 2016-05-16 09:26 GMT   |   Update On 2016-05-16 09:26 GMT
திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட அவர்லேடி பள்ளி, பூந்தோட்ட பள்ளி, தெரம் இந்துஜா பள்ளி உள்பட 30 மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால் இருள் சூழ்ந்தது.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்றது. ஆனால் திடீரென்று மழை பெய்ததன் காரணமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட அவர்லேடி பள்ளி, பூந்தோட்ட பள்ளி, தெரம் இந்துஜா பள்ளி உள்பட 30 மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால் இருள் சூழ்ந்தது.

வாக்குச்சாவடி மையங்களில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை இந்த மின் தடை இருந்தது. இதனால் மெழுகுவர்த்தி ஏற்றி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

மழை மற்றும் மின் தடைக்கு இடையிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

Similar News