செய்திகள்

ஜாபர்கான்பேட்டையில் இன்று ம.தி.மு.க. வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்: வைகோ பேசுகிறார்

Published On 2017-01-25 08:32 GMT   |   Update On 2017-01-25 08:32 GMT
ஜாபர்கான்பேட்டையில் இன்று ம.தி.மு.க. வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார்.

சென்னை:

ம.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் தென்சென்னை மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வக்கீல் ப.சுப்பிரமணி தலைமையில் சைதை பகுதி செயலாளர் சைதை எஸ்.வி.குமார் வரவேற்புரையில் ஜாபர்கான் பேட்டை கெங்கையம்மன் கோயில் திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். ம.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் தேவதாஸ், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், வக்கீல் கோ.நன்மாறன், சு.ஜீவன், டி.சி.ராஜேந்திரன், கே.கழககுமார், இ.வளையாபதி, ஆர்.இ.பார்த்திபன், மா.வை.மகேந்திரன், முராத் புகாரி, மல்லிகா தயாளன் உள்பட ம.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தென்சென்னை மேற்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Similar News