செய்திகள்

சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டுகள்

Published On 2017-02-07 20:18 GMT   |   Update On 2017-02-07 20:18 GMT
தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.
தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முதல் டுவீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் படம் கடந்த சிக்கல்களுடன் வெளியாகியது, அந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள அவர், மக்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று தனக்கு ஆதரவாக நின்றதாக குறிப்பிட்டுள்ளார். 

மற்றொரு டுவீட்டில், தமிழகமே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்னதாக அவர்கள் எழுந்து விடுவார்கள் என பதிவு செய்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு இரண்டு கருத்துக்களும்
பொருந்துவதால்,  கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார் என அனைவரும் வழக்கம் போல குழம்பி வருகின்றனர்.

Similar News