செய்திகள்

சேலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published On 2016-04-10 11:37 GMT   |   Update On 2016-04-10 12:38 GMT
சேலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை

சேலம்:

சேலம் அருகே உள்ளது தளவாய்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). விவசாயி. இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதற்கு அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் கீழே விழுந்து விட்டார்.

இதனால் வாழ்க்கை வெறுப்படைந்த சுந்தரம் வீட்டில் யாரும் இல்லாத போது செடிகளுக்கு அடிக்க வைத்து இருந்த விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் சுந்தரத்தை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவர் இறந்து விட்டார்.

இந்த உடலை சேலம் இரும்பாலை இன்ஸ்பெக்டர் மரியமுத்து, சப்–இன்ஸ்பெக்டர் ஊராளி உடையார் மற்றும் போலீசார் மீட்டு விசாரித்து வருகிறார்கள்.

Similar News