செய்திகள்

கும்பகோணத்தில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2016-06-15 11:38 GMT   |   Update On 2016-06-15 11:38 GMT
கும்பகோணத்தில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்:

கும்பகோணம் ஸ்டேட் பாங்க் காலனி விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ருக்மணி (66). சம்பவத்தன்று மதியம் இவர் கடைக்கு நடந்து சென்றார்.

பிடாரி குளம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மூதாட்டி ருக்மணியை மறித்து நாங்கள் போலீஸ்கார்கள். நீங்கள் தனியாக செல்லும் போது ஏன் நகை அணிந்து செல்கிறீர்கள்? அதனை கொடுங்கள்.

நாங்கள் பேப்பரில் பத்திரமாக மடித்து தருகிறோம். வீட்டிற்கு சென்றதும் அதனை எடுத்து அணிந்து கொள்ளுங்கள் என்றனர். இதனை நம்பி மூதாட்டி ருக்மணியும் தான் அணிந்திருந்த 3 பவுன் செயின், 4 பவுன் வளையல்கள் ஆகியவற்றை கழற்றி கொடுத்தார்.

அதனை 2 பேரும் மடித்து கொடுத்தனர். வீட்டிற்கு சென்று ருக்மணி அதனை பிரித்து பார்த்த போது அதில் கல் மட்டுமே இருந்தது. நகைகளை 2 பேரும் அபேஸ் செய்து விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை அபேஸ் செய்த 2 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News