செய்திகள்

நிச்சயம் முடிந்த பிறகு வேறு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2016-06-29 10:54 GMT   |   Update On 2016-06-29 10:54 GMT
கம்பம் அருகே நிச்சயம் செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

கம்பம் அருகில் உள்ள தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் சரண்யா (வயது 19). இவரை கோவை வேட்டைக்காரன் புதூர் முருகையா தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் ஆனந்தகுமார் (24) என்பவர் கடந்த 27.3.2016–ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்ய நிச்சயம் செய்தார்.

ஆனால் திருமணத்திற்கு முன்பே ஆனந்தகுமார் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே பிரிந்து விட்டனர். தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்த காதலன் ஆனந்தகுமார் மீது காதலி கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் இருவரையும் சமாதானம் செய்து பேசியபோது தனது காதலியையே திருமணம் செய்ய அவர் சம்மதித்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்த விபரம் சரண்யாவின் தந்தை கண்ணனுக்கு தெரியவரவே ஊரார் முன்னிலையில் தனது மகளை நிச்சயம் செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த ஆனந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

Similar News