செய்திகள்

தஞ்சை அருகே வீட்டில் நகை திருட்டு

Published On 2016-06-29 11:53 GMT   |   Update On 2016-06-29 11:53 GMT
தஞ்சை அருகே வீட்டில் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்:

பட்டுக்கோட்டை தாலுக்கா கீழக்குறிச்சி ஆத்தங்கரை தெருவை சேர்ந்தவர் சிவபுண்ணியம். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, 5 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 1 லட்சம் ஆகும். பின்னர் சிவபுண்ணியம் வீடு திரும்பிய போது கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News