செய்திகள்

சென்னையில் போலீஸ் வேட்டை: போதை பொருட்களை விற்பனை செய்த 17 பேர் கைது

Published On 2016-07-07 02:37 GMT   |   Update On 2016-07-07 02:37 GMT
சென்னையில் போதை பொருட்களை விற்பனை செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்கு பொட்டலங்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சென்னை நகரம் முழுவதும் மேற்கண்ட போதை பொருட்கள் விற்பவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து கைது செய்து வருகிறார்கள்.

பூக்கடை, யானைக்கவுனி, ஏழுகிணறு, முத்தையால் பேட்டை, மணலி மற்றும் மாதவரம் உள்ளிட்ட வடசென்னை பகுதி முழுவதும் நேற்று போலீசார் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் இந்த வேட்டையில் 17 பேரை கைது செய்தனர். இது சம்பந்தமாக கைது வேட்டை தொடரும் என்று போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News