செய்திகள்

செல்போன்கள் திருட்டு: 2 வட மாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

Published On 2016-07-07 09:20 GMT   |   Update On 2016-07-07 09:20 GMT
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு செயலில் பலர் ஈடுபடுவதால் பொதுமக்கள் உ‌ஷாராக இருக்கும் படி போலீசார் அறிவுரை கூறியுள்ளார்.
சேலம்:

சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்துக்கு இடமான வகையில் டவுன் பகுதியில் சுற்றி திரிந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்ட 2 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சேகர் குமார் (வயது20), ராஜா(25) என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நிறைய பேர் குடும்பத்துடன் வேலூர் மாவட்டத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் மளிகை கடை, துணிக்கடை, கட்டிட பணிகள் மற்றும் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்கள்.

இதில் சிலர் ரெயில் மூலம் சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று செல்போன் திருட்டில் ஈடுபடுவதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையம், காய்கறி மார்க்கெட், பஸ் நிலையங்களில் காணப்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இது போன்ற திருட்டு செயலில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் அவர்களிடம் உ‌ஷாராக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News