செய்திகள்

வடமதுரை அருகே வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி

Published On 2016-09-27 07:29 GMT   |   Update On 2016-09-27 07:29 GMT
வடமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.
வடமதுரை:

வடமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் காளிப்பன் (வயது52). இவர் திருச்சி ரெயில்வே போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று திருச்சியில் இருந்து தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அய்யலூரை அடுத்துள்ள கீரனூர் அருகே வந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த காளியப்பனை திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News