செய்திகள்

வீடு புகுந்து பெண்ணிடம் நகை திருட்டு

Published On 2016-09-28 09:59 GMT   |   Update On 2016-09-28 09:59 GMT
திருவையாறில் வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவையாறு:

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் படப்பைக்காடு கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ் என்பவரின் மனைவி பரமேஸ்வரி(34).

இவர் தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனது சொந்த ஊரான திருவையாறு வட்டம் அம்மன்பேட்டை தெற்கு வெள்ளாளத்தெருவில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கழுத்தில் அணிந்திருந்த செயினை கழற்றிவைத்து விட்டு தூங்கி உள்ளார். காலை எழுந்து பார்த்தபோது 5 பவுன் செயின் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News