செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு

Published On 2017-01-15 10:11 GMT   |   Update On 2017-01-15 10:11 GMT
கொதிகலன் குழாயில் பழுது, எந்திரக் கோளாறு காரணமாக வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பொன்னேரி:

மிஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில் முதலாவதி நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வநத்து.

இந்த நிலையில் முதலாவது நிலையில் உள்ள முதல் அலகில் எந்திர கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதேப்போல் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் இன்று காலை திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் அங்கும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

3-வது அலகு ஏற்கனவே பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் முதல்நிலையில் உள்ள 3 அலகுகளிலும் மின்உற்பத்தி முழுவதும் முடங்கி இருக்கிறது.

2-வது நிலையில் மட்டும் 2 அலகுகளிலும் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எந்திரக் கோளாறு மற்றும் கொதிகலனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Similar News