செய்திகள்

அய்யம்பேட்டை அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2017-02-01 09:50 GMT   |   Update On 2017-02-01 09:50 GMT
அய்யம்பேட்டை அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யம்பேட்டை:

பாபநாசம் அன்னுக்குடி ரோட்டைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 40). இவர் தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலெட்சுமி (வயது 31). இருவரும் நேற்று பாபநாசத்திலிருந்து தஞ்சைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அய்யம்பேட்டை அருகே நெடார் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்மநபர்கள் ஜெயலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயலெட்சுமி சுதாரித்துக் கொண்டு தாலியோடு செயினையும் பிடித்துக் கொண்டார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் தாலியும், பாதியளவு (2½ பவுன்) செயினும், ஜெயலெட்சுமி கையிலேயே இருந்துள்ளது. மீதி 2½ பவுன் செயினை மட்டும் மர்மநபர்கள் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News