செய்திகள்

மயிலாடுதுறையில் பணத்தட்டுப்பாட்டை நீக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம்

Published On 2017-02-01 10:39 GMT   |   Update On 2017-02-01 10:39 GMT
மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து பணத்தட்டுப்பட்டை நீக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கச்சேரி சாலையில் மனித சங்கிலி இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து பணத்தட்டுப்பட்டை நீக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கச்சேரி சாலையில் மனித சங்கிலி இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ. நாகை மாலி தலைமை தாங்கினார். இதில் இந்திய தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ. மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கம், ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் சங்கம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் மனித சங்கிலியில் கலந்துகொண்டனர்.

நாகை மாலி பேசும்போது மத்திய அரசு பணத்தட்டுபாடு 50 நாட்களில் சரியாகிவிடும் என்றது. இதுநாள் வரை சரிசெய்யப்படவில்லை. வங்கிகளில் கால்கடுக்க மக்கள் தவமிருக்கிறார்கள். மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுக்க கட்டுபாடுகள் விதிக்ககூடாது, காசற்ற பொருளாதாரத்தில் மக்களைக் கட்டாயப்படுத்தி உள்ள கூடாது விவசாய வேலைகள் பாதிக்கப்பட்டு முடங்கியதால் விவசாயிகள் கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

கிராமப்புற வேலை வாய்ப்புதிட்ட 100 நாள் வேலையை இருமடங்காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது என்றார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News