செய்திகள்

கரூர் அருகே பைக் விபத்தில் 3 பேர் காயம்

Published On 2017-02-01 11:04 GMT   |   Update On 2017-02-01 11:04 GMT
கரூர் அருகே பைக் விபத்தில் 3 பேர் காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், மூலிமங்கலம் அருகே ஒனவாக்கல் மேட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது20). இவரும் அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ்(29) அண்ணாத்துரை(45), ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் பைக்கை மாரிமுத்து ஓட்டினார். சின்ராஜ் மற்றும் அண்ணாத்துரை இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து பின்னால் வந்த கார் அதிவேகமாக வந்து மோட்டார் பைக் மீது மோதியது. இதில் மாரிமுத்து, சின்ராஜ், அண்ணாத்துரை ஆகியோர்களுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குபதிவு செய்து காரை ஓட்டிவந்த பெங்களுரை சேர்ந்த சிக்கன்னாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News