செய்திகள்

விருதுநகர் அருகே கற்களை கடத்தியதாக அ.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு

Published On 2017-02-01 13:41 GMT   |   Update On 2017-02-01 13:41 GMT
கற்களை சட்ட விரோதமாக கடத்தியதாக அ.தி.மு.க.நிர்வாகி உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள குப்பாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக கற்கள் கடத்தப்படுவதாக துணை தாசில்தார் ஜெயராமன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அதிகாரிகள் குப்பாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை சோதனை செய்த போது கற்கள் இருந்தது. அதனை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் இல்லை.

கற்களை குப்பாம்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கந்தவேல் (வயது 50) கடத்தி சென்றது தெரியவந்தது.

இது குறித்து துணை தாசில்தார் ஜெயராமன், வச்சக்காரபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அ.தி.மு.க. கிளை செயலாளர் கந்தவேல், டிராக்டர் டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Similar News