செய்திகள்

சொத்து தகராறில் முதியவரை கத்தியால் குத்திய பெண்

Published On 2017-02-01 16:58 GMT   |   Update On 2017-02-01 16:58 GMT
கும்மிடிப்பூண்டி அருகே சொத்து தகராறில் முதியவரை கத்தியால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 63). இவருக்கும் வேற்காடு கிராமத்தை சேர்ந்த சாந்திக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில் கவரைப்பேட்டை பஜாரில் நின்று கொண்டிருந்த வெங்கடேசனிடம் சொத்து தொடர்பாக சாந்தி தகராறில் ஈடுபட்டார். திடீரென ஆத்திரம் அடைந்த சாந்தி கத்தியால் வெங்கடேசனின் வலது கையில் குத்தினார்.

இதில் அவரது ஆள் காட்டி விரல் துண்டானது. முகத்திலும் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வெங்கடேசனுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து வெங்கடேசனின் மகன் மோகன் கவரைப்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து சாந்தியை கைது செய்தார்.

Similar News