செய்திகள்

செங்கல்பட்டு அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது

Published On 2017-02-08 07:21 GMT   |   Update On 2017-02-08 07:21 GMT
செங்கல்பட்டு அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை தேடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் உள்ள பாழடைந்த வீட்டில் பாண்டிச் சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சோதனை செய்தபோது 3 ஆயிரத்து 200 மதுபாட்டில்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி, பூபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News