செய்திகள்

டெல்லியில் மத்திய நிதி மந்திரியுடன் நாராயணசாமி சந்திப்பு

Published On 2017-02-08 09:43 GMT   |   Update On 2017-02-08 09:43 GMT
டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.
புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

அப்போது புதுவை மாநிலத்துக்கான கூடுதல் நிதியை விரைந்து வழங்குமாறு நாராயணசாமி வலியுறுத்தினார். அதோடு வறட்சி நிவாரணமாக புதுவைக்கு ரூ.100 கோடி நிதி வழங்க வேண்டும் என்றும் நாராயணசாமி கேட்டு கொண்டார்.

முன்னதாக இன்று காலை பிரதமரின் ஆலோசகர் பி.கே மிஸ்ராவை முதல்- அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

அப்போது புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை யூ.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நிரப்பி தருமாறு கேட்டு கொண்டார். இதற்கிடையே டெல்லியில் நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

Similar News