செய்திகள்

மீஞ்சூர் அருகே இளம்பெண் கொலையில் கணவரின் தம்பி உள்பட 2 பேர் கைது

Published On 2017-03-03 06:56 GMT   |   Update On 2017-03-03 06:56 GMT
மீஞ்சூர் அருகே இளம்பெண் கொலையில் கணவரின் தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ராஜாஜி தெருவில் வசித்து வருபவர் ஜாபர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தில்சாத் (வயது 35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த தில்ஷாத் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது நேற்று காலை தில்ஷாத்தின் வீட்டிற்கு வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் கணவரின் தம்பி அன்சார் மற்றும் செங்குன்றத்தை சேர்ந்த தங்கையன் மகன் தமிம் அன்சாரி ஆகியோர் வந்து சென்று இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது தில் ஷாத்தை இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண் டனர்.

அன்சாரி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜாபர், மனைவி தில்ஷாத்துடன் தனிக்குடித் தனம் சென்றுவிட்டார்.

நல்லவசதியுடன் வாழ்ந்த அவர்கள் எங்களை கவனிப்பதில்லை. இதற்கு தில்ஷாத்தான் காரணம் என்று நினைத்தோம். எனவே அவரை தீர்த்துக்கட்டினோம்’.

இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஜாபருடன் உறவினர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார். இளம்பெண்ணை உறவினர்களே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News