செய்திகள்

மதுரை அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-03-03 10:05 GMT   |   Update On 2017-03-03 10:05 GMT
மதுரை அருகே தேர்வு சரியாக எழுதாததால் விரக்தி அடைந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் 5-வது வார்டு பூங்குளத்தான் கிணற்று தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சுந்தரபாண்டி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று சுந்தரபாண்டி, அரசு தேர்வை எழுதினார். தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த சுந்தரபாண்டி யாருடன் பேசாமல், விரக்தியுடன் காணப்பட்டார். முதல் தேர்வை சரியாக எழுதவில்லை என தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுந்தர பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்வு சரியாக எழுதாத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News