செய்திகள்

நன்னிலம் அருகே கார் மோதி வாலிபர் காயம்

Published On 2017-03-03 11:30 GMT   |   Update On 2017-03-03 11:30 GMT
நன்னிலம் அருகே கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்னிலம்:

நன்னிலம் அடுத்த சிவந்திநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சம்பவத்தன்று இரவு எரவாஞ்சேரி கடைத் தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு வீடு திரும்பினார்.

அப்போது எரவாஞ்சேரியை சோந்த ஜமாலுதீன் மகன் அப்துல்ரகுமான் ஓட்டி வந்த கார் ராஜேந்திரன் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடன் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் எரவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News