செய்திகள்

முக்கூடல் அருகே தனியார் வங்கி பெண் ஊழியர் மாயம்

Published On 2017-03-03 12:26 GMT   |   Update On 2017-03-03 12:26 GMT
முக்கூடல் அருகே தனியார் வங்கி பெண் ஊழியர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கோவிலான்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அமுதா (வயது23). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் அமுதா, வங்கியில் விடுப்பு எடுத்து விட்டு சொந்த ஊருக்கு வந்தார். இங்கு வீட்டில் இருந்த அமுதாவை திடீரென்று காணவில்லை. சென்னையில் உள்ள வங்கியிலும் பணிக்கு சேரவில்லை.

இதனால் அமுதாவின் தாயார் செந்தில் வேலம்மாள் முக்கூடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை தேடி வருகிறார்கள்.

Similar News