செய்திகள்

மொடக்குறிச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-17 17:44 GMT   |   Update On 2017-03-17 17:44 GMT
மொடக்குறிச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மொடக்குறிச்சி:

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மொடக்குறிச்சி யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் லோக நாதன், ஈரோடு மாவட்ட வருவாய்த்துறை சங்க பொறுப் பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியம், தேர்வுநிலை, சிறப்பநிலை, கூடுதல் பொறுப்புப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Similar News