செய்திகள்

மதுரை அழகப்பன்நகரில் தொழில் அதிபர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2017-03-22 09:47 GMT   |   Update On 2017-03-22 09:47 GMT
தொழில் அதிபர் வீட்டில் பீரோவை உடைத்து 20 பவுன் நகையை மர்ம மனிதன் கொள்ளையடித்துச் சென்றனர்.

மதுரை:

மதுரை அழகப்பன் நகர் பாலாஜி தெருவைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 42). இவர் பீரோ தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

நேற்று அவர் வழக்கம் போல், கம்பெனிக்கு சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் மகள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.

இதனை தெரிந்து கொண்ட யாரோ மர்ம மனிதன் வீட்டுக்குள் புகுந்துள்ளான். அவன் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 19½ நகையை கொள்ளையடித்துச் சென்றுவிட்டான்.

இரவில் வீடு திரும்பிய சிவானந்தம், பீரோ உடைக்கப்பட்டு நகை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News