செய்திகள்

திருமங்கலத்தில் பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு

Published On 2017-03-22 12:43 GMT   |   Update On 2017-03-22 12:43 GMT
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

பேரையூர்:

திருமங்கலம் ஜவகர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன், என்ஜினீயர். இவரது மனைவி சாரதா தேவி (வயது 40).

இவர் இன்று (புதன்கிழமை) காலை புதுநகர் ரவுண்டானா பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அங்கு காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் ஒருவன் கீழே இறங்கி சாரதா தேவி அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்தான். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டான்.

இதுகுறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News