செய்திகள்

தேனி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த வாலிபர் மீது தாக்குதல்

Published On 2017-04-06 13:31 GMT   |   Update On 2017-04-06 13:31 GMT
தேனி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த வாலிபர் தாக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள உ.அம்மாபட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் கலையழகன். இவரது மனைவிக்கும் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 24) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கலையழகன் சந்தேகப்பட்டார். இதனால் தனது மனைவியையும், ராஜேசையும் அடிக்கடி கண்டித்து வந்தார்.

சம்பவத்தன்று சின்னமனூர் அருகே ராஜேஷ் காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது கலையழகன் தனது நண்பர் நிசார் ஆகியோருடன் சென்று ராஜேசிடம் தகராறு செய்தார்.

இந்த தகராறில் அவர்கள் இருவரும் ராஜேசை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். படுகாயமடைந்த ராஜேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து சின்மனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News