செய்திகள்

ராஜபாளையம் அண்ணாநகர் பகுதிக்கு விரைவில் மின் இணைப்பு வசதி கிடைக்கும்: தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உறுதி

Published On 2017-10-31 13:09 GMT   |   Update On 2017-10-31 13:09 GMT
ராஜபாளையம் அண்ணாநகர் பகுதிக்கு விரைவில் மின் இணைப்பு வசதி கிடைக்கும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் நகராட்சி 8-வது வார்டு அண்ணாநகர் மாடசாமி கோவில் தெரு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பெற முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து தெரிய வந்ததும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தினார்.

அதன் பின்னர் மக்களிடம் பேசிய அவர், உங்கள் பகுதிக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே விரைவில் மின்இணைப்பு வசதி கிடைத்துவிடும் என்றார்.

நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டார் வேல்முருகன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, உதுமான் உட்பட பலர்  ஆய்வில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News