செய்திகள்

ஆவடி அருகே டாக்டர் வீட்டில் கொள்ளை

Published On 2018-01-02 08:04 GMT   |   Update On 2018-01-02 08:04 GMT
ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருநின்றவூர்:

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மனோஜ்குமார். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். புத்தாண்டையொட்டி அவர் வீட்டை பூட்டிவிட்டு கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் மாடியில் உள்ள கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 8 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News