செய்திகள்

கடம்பூர் அருகே வயிற்றுப்போக்கால் பொதுமக்கள் அவதி: மூதாட்டி மரணம்

Published On 2018-01-05 10:15 GMT   |   Update On 2018-01-05 10:15 GMT
கடம்பூர் அருகே பழைய கிணற்று தண்ணீரிரை குடித்த பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் மூதாட்டி ஒருவர் இறந்தார்.

சத்தியமங்கலம்:

கடம்பூரை அடுத்த அட்டணை மலை கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இவ்வூரில் உள்ள ஆழ்துளை கிணறு மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்தினர் முன் வராததால் பொதுமக்கள் ஊரில் உள்ள பழைமையான பொது கிணற்றில் தண்ணீரை எடுத்து குடித்துள்ளனர்.

இதனால் இந்த ஊரை சேர்ந்த அரப்புளியம்மாள் (வயது 70) முருகன் (55) சுமதி (25) துரைசாமி (55) பழனிச்சாமி (45) அன்பரசு (16) சுதாகர் (12) சாந்தி(30) தருண்(2) ரசித் (3) அபீஸ் வரி (7) முரளி (4) ராமர் (50) செல்லம்மாள் (62) குப்புசாமி (60) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்று போக்கு-வாந்தி ஏற்பட்டது.

இதில் பல பேர் சத்தி தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று தேறியுள்ளனர். இதில் செல்லம்மாள் என்பவருக்கு அதிகபடியான வயிற்று போக்கு ஏற்பட்டதால் நேற்று மாலை பசுவனா புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின் வீடு திரும்பியுள்ளார்.

எங்களுக்கு குடிநீர் மோட்டார் பழுது ஏற்பட்ட தால் பழைய கிணற்று நீரை குடித்தோம். அதனால் எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலானோருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர்.

நேற்று மாலைதான் நட மாடும் மருந்துவ குழுவினர் மாத்திரைகள் வழங்கி விட்டு பவுடரை இரைத்து சென்றனர். இந்த ஊரை சேர்ந்த மாதி (65) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

கடந்த 20 நாட்களாக அவதிப்படுகிறோம். 2 நடமாடும் மருந்துவ குழு உள்ளன. இவர்கள் யாரும் ஊர் பக்கமே வரவில்லை. குடிநீர் மோட்டார் பழுதை உடனே சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர். 

Tags:    

Similar News