செய்திகள்
106 வயதாகும் ஆரோக்கியசாமியை புதுவை டிஜிபி நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார்.

106 வயது முன்னாள் இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி. நேரில் பொங்கல் வாழ்த்து

Published On 2018-01-15 04:45 GMT   |   Update On 2018-01-15 04:45 GMT
106 வயதாகும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமியை புதுவை டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை நெல்லித்தோப்பு அருள்படையாச்சி வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது106). இவர் கடந்த 1937-ம் ஆண்டு புதுவை காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். அதன்பின் பதவி உயர்வு பெற்று முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 1965-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது மனைவி இருதயமேரி.

இவர்களுக்கு 5 பிள்ளைகள். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது நெல்லித்தோப்பு வீட்டில் வசித்து வரும் ஆரோக்கியசாமி 100 வயதை கடந்து விட்டதால் தற்போது 2 பென்சன் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் புதுவை போலீசார் 106 வயதான முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி மற்றும் அவரது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் பட்டுவேட்டி -சட்டை அணிந்து ஆரோக்கியசாமி வீட்டுக்கு சென்றார். அவரை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.

போலீஸ் டி.ஐ.ஜி. க்கள் சந்திரன், ராஜிவ்ரஞ்சன், ஆயுதபடை கமாண்டன்ட் பர்ன்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், கொண்டாவெங்கடேஸ்வராவ், இன்ஸ்பெக்டர்கள் வீரவலல்வன், செந்தில்குமார், தனசெல்வம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

டி.ஜி.பி. சுனில்குமார் தன்வீட்டில் தயார் செய்த பொங்கல், பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை ஆரோக்கியசாமிக்கு கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் மற்ற போலீசாரும் வாழ்த்து பெற்றனர். #TamilNews
Tags:    

Similar News