செய்திகள்

களக்காடு அருகே செங்கல் சூளை அதிபரிடம் பணம் பறித்த ரவுடி கைது

Published On 2018-01-15 12:33 GMT   |   Update On 2018-01-15 12:33 GMT
களக்காடு அருகே செங்கல் சூளை அதிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தி பகுதியை சேர்ந்தவர் கார்த்தீசன் (வயது35). செங்கல் சூளை அதிபரான இவரிடம் சம்பவத்தன்று காடுவெட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கண்ணன், கார்த்தீசனை மிரட்டி அவர் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார்.

இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான கண்ணன் மீது கொலை, கொலைமிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News