செய்திகள்

கண்ணமங்கலம் அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2018-12-22 12:47 GMT   |   Update On 2018-12-22 12:47 GMT
கண்ணமங்கலம் அருகே வீட்டில் தனியாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகள் கிரிஜா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனிமையில் இருந்த கிரிஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News