செய்திகள்
உயிரிழப்பு

செட்டிப்பாளையம் அருகே 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

Published On 2019-09-03 10:25 GMT   |   Update On 2019-09-03 10:25 GMT
செட்டிப்பாளையம் அருகே திருமணமான 1½ வருடத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி பாரதி (வயது 22). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் பாரதி கர்ப்பமானார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.பின்னர் பாரதி ஒத்தகால் மண்டபத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

நேற்று மதியம் அவர் வழக்கம் போல உணவு சாப்பிட்டு விட்டு சோர்வாக இருப்பதாக கூறி விட்டு தனது அறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் அவரது தாய் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பாரதி உடல் நடுங்கியபடி மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பாரதியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ வருடத்தில் பாரதி இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News