செய்திகள்
பணம் பறிப்பு

வாலிபரை மிரட்டி பணம் பறித்த போலீசார் - காலில் விழவைத்து அவமானப்படுத்தினர்

Published On 2019-10-29 10:38 GMT   |   Update On 2019-10-29 11:33 GMT
சென்னை மெரினா கடற்கரையில், நெல்லை வாலிபரிடம் இருந்து போலீசார் பணத்தை பறித்ததுடன், காலில் விழ வைத்து அவமானப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

நெல்லையை சேர்ந்தவர் உத்தமராசா. இவர் மெரினா கடற்கரையில் தனது நண்பர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 3 போலீசார் அங்கு வந்தனர். சீருடையில் இருந்த அவர்கள், தகராறில் ஈடுபட்டனர். பின்னர் உத்தமராசாவிடமிருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்தனர்.

அப்போது 3 பேரும் சேர்ந்து உத்தமராசாவை தாக்கினர். இதில் அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி வாலிபர் உத்தமராசா மெரினா போலீசில் புகார் செய்தார். அதில் காசிநாதன், கவியரசன் மற்றும் பெயர் தெரியாத இன்னொரு காவலர் ஆகியோர் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை பறித்து விட்டு போலீசார் காலில் விழவைத்து அவமானப்படுத்திய தாகவும் உத்தமராசா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News