செய்திகள்
விபத்து

தஞ்சை அருகே விபத்து- விவசாயி பலி

Published On 2020-05-06 08:34 GMT   |   Update On 2020-05-06 08:34 GMT
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சையை அடுத்த மருங்குளம் அருகே உள்ள சூர்யம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 60). விவசாயியான இவர் நேற்று மின்னாத்தூரில் இருந்து சூர்யம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே ஒரத்தநாட்டை சேர்ந்த ஆனந்தன்(வயது 42) என்பவர் ஒரத்தநாட்டில் இருந்து சூர்யம்பட்டி நோக்கி ஸ்கூட்டரில் வந்த போது இரண்டு இருசக்கர வாகனமும் எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விவசாயி கலியபெருமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து உயிரிழந்த கலியபெருமாளின் மகன் தமிழ்செல்வன்(30) கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News